Published : 30 Oct 2014 02:00 PM
Last Updated : 30 Oct 2014 02:00 PM

பலாத்கார வழக்கில் 5 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை

ஒடிஸாவில் மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் கடந்த ஆண்டு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு உள்ளூர் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

இப்பெண் கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரியில் மயூர்பஞ்ச் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது கணவனை உடனிருந்து கவனித்து வந்தார். இந்நிலையில் இயற்கை உபாதையை கழிக்க அருகில் உள்ள நீரோடைப் பகுதிக்குச் சென்றபோது, 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த 6 பேரையும் போலீஸார் கைது செய்தனர். இதில் ஒருவர் சிறையில் இறந்தார்.

இந்நிலையில் இவ்வழக்கில் எஞ்சிய 5 பேருக்கும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தலா ரூ.5,000 அபராதமும் விதித்து நீதிபதி நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x