பள்ளிகள் மதிய உணவு சாப்பிடும் இடமாக மட்டுமே உள்ளன: பிரகாஷ் ஜவடேகர் கருத்து

பள்ளிகள் மதிய உணவு சாப்பிடும் இடமாக மட்டுமே உள்ளன: பிரகாஷ் ஜவடேகர் கருத்து
Updated on
1 min read

பல பள்ளிகள் வெறும் ‘மதிய உணவுப் பள்ளிக்கூடங்களாக’ மாறி விட்டன என்று மனித வள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மாநிலங்களவையில் தெரிவித்தார்.

கேள்வி நேரத்தின் போது அவர் கூறியதாவது:

பள்ளிகள் மதிய உணவுப் பள்ளிக்கூடங்களாக மாறிவிட்டன, மாணவர்கள் வருகின்றனர் சாப்பிடுகின்றனர் சென்று விடுகின்றனர். 8-ம் வகுப்பு வரை கட்டாய பாஸ் சட்டம் இருப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து புதிய மசோதாவுக்கு திட்டமிட்டுள்ளோம், இதன்படி 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புகளில் குறைந்த பட்ச கற்றலைக் கூட எட்ட முடியாத மாணவர்களை பெயில் செய்வது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். பெயில் கூடாது என்ற சட்டத்தை மாற்ற வேண்டும் என்று மாநிலங்களும் கோரிக்கை வைத்துள்ளன.

6-ம் வகுப்பு படிக்கும் மாணவர் 2-ம் வகுப்புக்குரிய பாடத்தை கூட படிக்க முடியாமல் இருக்கிறார், அதே போல் 7-ம் வகுப்பு மாணவர் 3-ம் வகுப்புக்குரிய கணக்கைக் கூட சரியாகப் போட முடியாமல் தவிக்கிறார், இது மிகவும் சீரியசான விஷயம்.

கல்வியின் தரத்தை உயர்த்த கடந்த 3 ஆண்டுகளில் 47 கேந்திரிய வித்யாலயாக்கள் திறக்கப்பட்டுள்ளன, மேலும் 50 பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

கிராமப்புறங்களுக்காக 62 புதிய ஜவகர் நவோதயா வித்யாலயாக்கள் வருகின்றன. கல்வியின் தரத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கவும் முடிவெடுத்துள்ளோம்.

இவ்வாறு கூறினார் ஜவடேகர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in