Published : 09 Jun 2017 07:39 AM
Last Updated : 09 Jun 2017 07:39 AM
கேரளாவில் 3 நட்சத்திர ஹோட்டல் களில் மீண்டும் மதுபான பார் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் முந்தைய காங்கிரஸ் அரசு கடந்த 2013-ம் ஆண்டு பூரண மதுவிலக்கை அமல்படுத்தியது. இதன்படி 5 நட்சத்திர அந்தஸ்துக்கு குறைவான ஹோட்டல்களில் உள்ள 712 பார்கள் மற்றும் மதுக் கடைகள் மூடப்பட்டன.
இந்நிலையில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் விஜயன் கூறும்போது, “முந்தைய அரசின் மது விலக்கு கொள்கையால் அரசின் வருவாய் குறைந்துள்ளது. எனவே, புதிய மது விலக்கு கொள்கை வெளியிடப்பட்டுள்ளது” என்றார்.
இதன்படி, 3 நட்சத்திர அந்தஸ்துக்கு மேற்பட்ட சொகுசு ஹோட்டல்களில் மூடப்பட்ட மதுபான பார்கள் ஜூலை 1-ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படும். இந்த ஹோட்டல்களில் கள் விற் பனைக்கும் அனுமதி வழங்கப்படும். மேலும் மது குடிப்பதற்கான வயது வரம்பை 21-லிருந்து 23 ஆக அதிகரிக்கப்பட உள்ளது. அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இப்போது 5 நட்சத்திர ஹோட்டல்களில் மதுபான பார்கள் செயல்பட்டு வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT