Last Updated : 21 Aug, 2016 10:37 AM

 

Published : 21 Aug 2016 10:37 AM
Last Updated : 21 Aug 2016 10:37 AM

பிஹாரில் ஆர்ஜேடி பிரமுகர் சுட்டுக்கொலை

பிஹார் மாநிலம், ரசுல்பூர் பகுதியை சேர்ந்தவர் வினோத் யாதவ். ஆளும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் உள்ளூர் தலைவரான இவர் பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்க 2 பேருடன் சென்றுகொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் இவரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிவிட்டனர்.

இதையடுத்து யாதவின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இக்கொலைக்கு தனிப்பட்ட விரோதமே காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பிஹாரில் 3 நாட்களுக்கு முன், பாஜக பிரமுகர் அசோக் ஜெய்ஸ்வால் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x