Published : 25 Apr 2017 09:22 AM
Last Updated : 25 Apr 2017 09:22 AM
ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆதோனி மற்றும் நிமிங்கனூரு பகுதிகளைச் சேர்ந்த 2 பெண்கள் வந்தனர். அப்போது, அவர்கள் இருவரும் கடுமையான காய்ச்ச லால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
அவர்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டதில், இருவருக்கும் பன்றிக் காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, அவர்கள் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அந்தப் பெண்கள் வசிக்கும் பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர ஆய்வு செய்து வருகின்றனர். மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT