Published : 21 Jan 2014 08:02 AM
Last Updated : 21 Jan 2014 08:02 AM

2ஜி: ராசா, கனிமொழியிடம் மார்ச் 3-ல் வாக்குமூலம்

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோரின் வாக்குமூலங்களை மார்ச் 3-ம் தேதி பதிவு செய்ய சிபிஐ நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர்களிடம் கேட்க வேண்டிய கேள்விகள் இன்னும் தயாரிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கு அவகாசம் அளிக்கும் வகையில் விசா ரணையை மார்ச் 3-ம் தேதிக்கு நீதிபதி ஓ.பி.சைனி ஒத்திவைத்தார். முன்னதாக, குற்றம் சாட்டப்பட்டோரின் வழக்கறிஞர்களும் கூடுதல் கால அவகாசம் கோரினர்.

இந்த வழக்கில் சிபிஐ தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களை பதிவு செய்யும் பணி கடந்த நவம்பர் 27-ம் தேதி முடிவடைந்தது. அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி, அவரின் மனைவி டினா அம்பானி, அரசியல் தரகர் நீரா ராடியா, அட்டர்னி ஜெனரல் ஜி.இ. வாஹன்வதி உள்பட 153 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x