கசியும் ஆதார் தகவல்கள்: மாநில அரசுகளுக்கு அறிவுரை

கசியும் ஆதார் தகவல்கள்: மாநில அரசுகளுக்கு அறிவுரை
Updated on
1 min read

மாநில அரசுகளின் இணைய தளங்களில் தனிநபர்களின் ஆதார் தகவல்களை கசியவிடு வதை தடுத்து நிறுத்தும்படி மத்திய அரசு அறிவுறுத்தி யுள்ளது. மேலும் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடு வோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

மாநில அரசுகளின் பல்வேறு துறைகளில் இயங்கும் இணைய தள சாரம்சங்களை சீராய்வு செய்து தனி நபர்களின் ஆதார் எண், வங்கி கணக்கு விவரங்கள் ஆகியவை கசியவிடப்படுகிறதா என்பதை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட் டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in