Published : 05 Feb 2014 12:32 PM
Last Updated : 05 Feb 2014 12:32 PM

முக்கிய மசோதாக்கள் நிறைவேற வாய்ப்பில்லை: ப.சிதம்பரம்

நாடாளுமன்றத்தில் முக்கிய மசோதாக்கள் நிறைவேற வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை என மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

15-வது நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத் தொடர் இன்று தொடங்கியது, முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டுயளித்த சிதம்பரம்: மத்திய இடைக்கால பட்ஜெட் தவிர முக்கிய மசோதாக்கள் நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.

சம்பிரதாயத்திற்காக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு தினமும் வந்துவிட்டு வெறுங் கையோடு செல்ல வேண்டியதுதான் என்றார்.

பிரதமர் வேண்டுகோள்:

இதற்கிடையில், நாட்டுக்கு மிகவும் அவசியமான முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் மன்மோகன் சிங் கோரிக்கை விடுத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x