Published : 31 Jul 2016 11:44 AM
Last Updated : 31 Jul 2016 11:44 AM
ஜெட்டா நகரில் சுமார் 800 இந்தியர்கள் பட்டினியால் வாடுவதாக வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு ட்விட்டரில் ஒருவர் தகவல் அனுப்பியிருந்தார்.
இதன்பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அமைச்சர் சுஷ்மா நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ‘‘பட்டினியால் வாடும் இந்திய தொழிலாளர்களுக்கு இலவச உணவுப் பொருள் வழங்க ரியாத் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு உத்தர விட்டுள்ளேன். வெளியுறவு இணை அமைச்சர் வி.கே.சிங்கும் அங்கு செல்கிறார். சவுதி அரேபியாவில் இந்தியத் தொழிலாளர்களை பட்டினியால் தவிக்க விடமாட்டோம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT