Published : 03 Dec 2013 12:00 AM
Last Updated : 03 Dec 2013 12:00 AM

நிலவின் சுற்றுப்பாதையைக் கடந்தது ‘மங்கள்யான்’

செவ்வாய்கிரகத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் ‘மங்கள்யான்’ ஆய்வுக்கலம் நிலவின் சுற்றுப்பாதையைக் கடந்து விட்டது என இந்திய விண்வெளி ஆய்வுக்கழகம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரோ அதிகாரிகள் கூறுகையில், “தொழில்நுட்ப முறையில் கூறுவதானால் நமது சந்திராயன் வட்டப்பாதையைக் கடந்து, நிலவைக் கடந்துள்ள மங்கள்யான் செவ்வாய்கிரகத்தை நோக்கிச் சென்றுகொண்டுள்ளது. தினமும் 10 லட்சம் கி.மீ. தொலைவை மங்கள்யான் கடக்கிறது” எனத் தெரிவித்தனர்.

மங்கள்யானின் பயணம், பெங்களூரில் உள்ள இஸ்ரோ டெலிமெட்ரி, பின்தொடர்தல் மற்றும் கட்டுப்பாட்டு வலையமைவு மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x