Published : 20 Feb 2017 02:08 PM
Last Updated : 20 Feb 2017 02:08 PM
ரஞ்சி கிரிக்கெட் வீரர் ஹர்பீத் சிங் இன்று காலை மும்பை, அந்தேரி புறநகர் ரயில் நிலைய நடைமேடைக்குள் தனது காரை ஓட்டிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அவரது கார் பறிமுதல் செய்யப்பட்டு ஹர்பீத் சிங்கையும் கைது செய்ததாக ரயில்வே பாதுகாப்பு காவலதிகாரி தெரிவித்தார்.
ரயில்வே சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காலை 7.20 மணிக்கு பரபரப்பான, நெரிசலான புறநகர் ரயில் நிலையமான அந்தேரியின் முதல் நடைமேடையில் இவர் காரை ஓட்டிச் சென்றது ஏன் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT