Published : 23 Oct 2013 11:23 AM
Last Updated : 23 Oct 2013 11:23 AM

சிங்கப்பூரில் இருந்து தங்கம் கடத்திய 8 பேர் கைது

சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் தங்கம் கடத்தி வந்த மதுரையை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இன்று அதிகாலை, சிங்கப்பூரில் இருந்து கேரளா வழியாக தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 8 பேர் கொண்ட கும்பல் சிக்கியது. அவர்களிடம் இருந்து 1 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 1கோடி இருக்கும் என கூறப்படுகிறது. முதல் கட்ட விசாரணையில், அவர்கள் மதுரையை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x