Published : 03 Jan 2014 06:32 PM
Last Updated : 03 Jan 2014 06:32 PM

பெட்ரோல் விலை 75 பைசா, டீசல் 50 பைசா அதிகரிப்பு

பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 பைசா அதிகரிக்கப்பட்டது. இந்த விலை அதிகரிப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

அதேநேரத்தில், டீசல் விலை வழக்கம்போல் லிட்டருக்கு 50 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை மாற்றம், உள்ளூர் வரி, வாட் வரிக்கு ஏற்ப அந்தந்தப் பகுதிகளில் விலை அதிகரிப்பு அமலுக்கு வருகிறது.

சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப 15 நாள்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது. அதையொட்டி, பெட்ரோல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x