Published : 19 Feb 2014 06:44 PM
Last Updated : 19 Feb 2014 06:44 PM

மக்களவைத் தேர்தலில் மம்தாவுக்கு ஆதரவு: ஹசாரே அறிவிப்பு

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை ஆதரிப்பதாக, சமூகர் ஆர்வலர் அண்ணா ஹசாரே அறிவித்தார்.

டெல்லியில் இன்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியுடன் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டிய அளித்த அண்ணா ஹசாரே கூறியது:

"நான், மம்தா பானர்ஜியை ஆதரிப்பது அவரது கட்சியினால் அல்ல, தேசத்தின் மீதும், சமுதாயத்தின் மீதும் அவருக்குள்ள நல்ல எண்ணங்களினால்தான். அவர் நினைத்தால், ஆடம்பரமாக வாழ முடியும். ஆனால் அவர் அப்படி வாழவில்லை.

எனது வாழ்க்கை முழுவதையும் நான் நாட்டிற்காகவும் சமுதாயத்திற்காகவும் செலவிட்டுள்ளேன். முதல் முறையாக நான் மம்தாவைப் போல் தேசம் மற்றும் சமுதாயத்திற்காக சிந்திக்கும் ஒருவரை சந்தித்துள்ளேன்" என்றார் அண்ணா ஹசாரே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x