முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீதிபதி குன்ஹா, வழக்கறிஞர் ஆச்சார்யா வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீதிபதி குன்ஹா, வழக்கறிஞர் ஆச்சார்யா வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு
Updated on
1 min read

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து பெங்க ளூருவில் உள்ள நீதிபதி குன்ஹா, அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா ஆகியோரின் வீடுகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட் டோருக்கு எதிராக சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா கடந்த 2014-ல் தீர்ப்பு வழங்கினார். அதிர்ச்சி அடைந்த அதிமுகவினர், நீதிபதி குன்ஹா, அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவுக்கு எதிராக பெங்க ளூருவில் போராட்டம் நடத்தினர். இதனால் பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில் சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கும் என அறிவிக்கப்பட்டதால் முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக நீதிபதி குன்ஹா, அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவுக்கு பாதுகாப்பு வழங் கப்பட்டது. பெங்களூரு மாநகர காவல் ஆணையர் பிரவீன் சூட் உத்தரவின் பேரில் கோரமங்களா பகுதியில் உள்ள நீதிபதி குன்ஹா வின் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய 5 போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். மேலும் அவர் எங்கு சென்றாலும் பாதுகாப்பு வழங்குவதற்காக துணை ராணுவப்படை அதிகாரி மற்றும் 6 போலீஸார் நியமிக்கப்பட்டனர்.

இதே போல், பெங்களூரு ஜெயம்ஹால் பகுதியில் உள்ள கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவின் வீட்டுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in