Published : 20 Oct 2014 10:48 AM
Last Updated : 20 Oct 2014 10:48 AM
டீசலுக்கு இதுவரை இருந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளதை ஆட்டோமொபைல் துறையினர் வரவேற்றுள்ளனர். சந்தை விலை நிலவரத்துக்கு ஏற்ப இனி டீசல் விலை நிர்ணயிக்கப்படும்.
இதனால் ஆட்டோமொபைல் துறையினரும் அதற்கேற்ப உத்திகளை வகுக்க முடியும் என்று மாருதி சுஸுகி நிர்வாக இயக்குநர் ஆர்.சி. பார்கவா தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் அரசின் நிலைப்பாடு தெளிவாகி யுள்ளது. இதனால் வாகனங்கள் தயாரிப்பு குறித்து திட்டமிட ஏதுவாகியுள்ளது என்று ஹுன்டாய் நிறுவனத்தின் விற்பனை பிரிவுத் துணைத் தலைவர் ராகேஷ் ஸ்ரீவத்ஸவா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT