Published : 17 Oct 2013 09:23 AM
Last Updated : 17 Oct 2013 09:23 AM

மகாராஷ்டிராவில் நக்சல் தாக்குதல்: 3 காவலர்கள் பலி

மகாராஷ்டிர மாநிலம் காட்சிரோலியில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர்.

இன்று அதிகாலையில், காட்சிரோலி மாவட்டம் கூர்கேதா பகுதியில், காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் காவல்துறையினரை குறிவைத்து சரமரியாக தாக்கினர்.

இந்த தாக்குதலில் 3 காவலர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். சம்பவ பகுதிக்கு, காவல் உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x