Published : 26 Feb 2014 10:20 AM
Last Updated : 26 Feb 2014 10:20 AM

கருணைக் கொலை: அரசமைப்புச் சட்ட அமர்வு விசாரிக்கும்

கருணைக் கொலையை சட்டபூர்வமாக அனுமதிக்கலாமா என்பது பற்றிய வழக்கு அரசமைப்புச் சட்ட அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி ப.சதாசிவம் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை இந்த உத்தரவை பிறப்பித்தது.தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீது மேற்சொன்ன உத்தரவை உச்ச நீதிமன்ற அமர்வு பிறப்பித்தது.

‘2011ல் அருணா சண்பக் வழக்கில் பிறப்பித்த தீர்ப்பு தவறான பார்வையிலானதாகும்.கருணைக் கொலையை அனுமதிக்கும் விவகாரத்தில் எல்லா அம்சங்களையும் ஆழமாக ஆராய்ந்து விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை அரசமைப்புச் சட்ட அமர்வு வகுக்கும்’ என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x