Last Updated : 20 Jun, 2017 09:53 AM

 

Published : 20 Jun 2017 09:53 AM
Last Updated : 20 Jun 2017 09:53 AM

விவசாயிகள் கடன் தள்ளுபடி: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு

பஞ்சாப் சட்டப்பேரவையில் முதல்வர் அமரிந் தர் சிங் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

பஞ்சாபில் உள்ள சிறு விவசாயிகளின் கடன்கள் ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி செய்யப்படும். அதேபோல் 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கும் ரூ.2 லட்சம் கடன் தள்ளுபடி செய்யப்படும். மற்ற விவசாயிகள் எவ்வளவு கடன் வாங்கியிருந்தாலும், அதில் ரூ.2 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும்.

கடந்த மார்ச் மாதம் நடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். இதன் மூலம் 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள 8.75 லட்சம் விவசாயிகள் உட்பட மொத்தம் 10.25 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள்.

இவ்வாறு முதல்வர் அமரிந்தர் சிங் அறிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x