Published : 23 Jun 2016 10:08 AM
Last Updated : 23 Jun 2016 10:08 AM
ஆந்திராவில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த காவல்துறை ஆய்வாளர் வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத கோடிக் கணக்கான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாகப்பட்டினத்தில் உள்ள 4-வது காவல் நிலையத்தில் காவல்துறை ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பால கிருஷ்ணா. இவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, நேற்று பால கிருஷ்ணா பணியாற்றி வரும் காவல்நிலையம், அவரது வீடு உட்பட மொத்தம் 9 இடங்களில் ஒரே சமயத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பாலகிருஷ்ணா வில் வீட்டில் இருந்து 25 சவரன் நகை, ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள், ரூ. 4 கோடி மதிப்புள்ள வீட்டுப் பத்திரங்கள், வேளாண் நிலப்பத்திரங்கள் ஆகியவை சிக்கின. இதனை லஞ்ச ஒழிப்பு துறையினர் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT