Published : 23 Jun 2016 10:08 AM
Last Updated : 23 Jun 2016 10:08 AM

போலீஸ் அதிகாரி வீட்டில் 25 சவரன், பத்திரம் பறிமுதல்

ஆந்திராவில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த காவல்துறை ஆய்வாளர் வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத கோடிக் கணக்கான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாகப்பட்டினத்தில் உள்ள 4-வது காவல் நிலையத்தில் காவல்துறை ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பால கிருஷ்ணா. இவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, நேற்று பால கிருஷ்ணா பணியாற்றி வரும் காவல்நிலையம், அவரது வீடு உட்பட மொத்தம் 9 இடங்களில் ஒரே சமயத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பாலகிருஷ்ணா வில் வீட்டில் இருந்து 25 சவரன் நகை, ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள், ரூ. 4 கோடி மதிப்புள்ள வீட்டுப் பத்திரங்கள், வேளாண் நிலப்பத்திரங்கள் ஆகியவை சிக்கின. இதனை லஞ்ச ஒழிப்பு துறையினர் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x