Published : 18 Feb 2017 08:49 AM
Last Updated : 18 Feb 2017 08:49 AM

கல்வி உதவித் தொகைக்கு ஆதார் எண் கட்டாயம்: மத்திய அரசு உத்தரவு

பள்ளி மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் ஏழை மாணவர்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது.

அதன்படி அதிக மதிப் பெண் பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.500 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் கடந்த 2015-16-ம் ஆண்டில் நாடு முழுவதும் 2.05 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்தனர்.

இந்நிலையில் இந்த உதவித் தொகையை பெற ஆதார் எண்ணைச் சமர்ப்பிப்பது அவசியம் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கடந்த 15-ம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது.

இத்திட்டத்தில் உதவித் தொகையை பெற வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் மாணவர்கள் தங்களின் ஆதார் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும்.

இதுவரை ஆதார் எண் பெறாத மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளின் முதல்வர்கள் உதவி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

சமூக நீதி மற்றும் தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 12 கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கு ஆதார் எண் ஏற்கெனவே கட்டா யமாக்கப்பட்டிருப்பது குறிப் பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x