Published : 14 Jun 2016 10:04 AM
Last Updated : 14 Jun 2016 10:04 AM
மதுரா மாவட்டம், ஜவஹர் பாக் பகுதியில் அரசுக்கு சொந்தமான 250 ஏக்கர் நிலத்தை ஒரு அமைப்பைச் சேர்ந்தவர் கள் சட்டவிரோதமாக ஆக்கிர மித்திருந்தனர்.
கடந்த 2-ம் தேதி ஆக்கிரமிப்பாளர்களை போலீ ஸார் அகற்ற முயன்றபோது கலவரம் மூண்டது. இதில் மதுரா எஸ்பி முகுல் துவிவேதி மற்றும் பரா காவல் நிலைய அதிகாரி சந்தோஷ் யாதவ் ஆகிய 2 பேர் உட்பட 29 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இந்த சம்பவத் தில் உயிரிழந்த போலீஸ் அதிகாரி களின் குடும்பத்தினரை மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘மதுரா கலவரம் துரதிருஷ்டவசமானது. இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளது. அனைத்து கோணத்திலும் இந்த விசாரணை நடைபெறும் என்று நம்புகிறேன்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT