Published : 02 Jul 2016 11:15 AM
Last Updated : 02 Jul 2016 11:15 AM

பசுமை நெடுஞ்சாலைகள் திட்டம் மூலம் : 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் மத்திய அமைச்சர் அறிவிப்பு

தேசிய பசுமை நெடுஞ்சாலைகள் திட்டத்தின் கீழ் 1 லட்சம் கி.மீ தூரத் துக்கு மரக்கன்றுகள் நடப்படும். இதன் மூலம் 10 லட்சம் இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு கிடைக் கும் என அரசு தெரிவித்துள்ளது.

டெல்லியில் நேற்று தேசிய பசுமை நெடுஞ்சாலைகள் திட்டத்தை தொடங்கி வைத்து மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது:

1,500 கி.மீ தொலைவுக்கு மரக்கன்றுகள் நடும் திட்டம் இன்று (நேற்று) தொடங்கப்பட்டுள்ளது. ஒரு கி.மீ தூர பாதையை பசுமை யாக்குவதன் மூலம் 10 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அந்த வகையில் 1,500 கி.மீ தூர பாதை மூலம் 15,000 பேர் பயனடை யவுள்ளனர்.

அந்த வகையில் 1 லட்சம் கி.மீ தேசிய நெடுஞ் சாலையை பசுமையாக்கும் திட்டம் மூலம் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். விரைவில் 2 லட்சம் கி.மீ தூரத்துக்கு திட்டம் நீட்டிக்கப்படும்.

இந்த திட்டத்தில் இதுவரை 10 மாநிலங் கள் மத்திய அரசுடன் கைகோர்த் துள்ளன. அவற்றில் ஹரியாணா மாநிலம் 415 கி.மீ, ஜம்மு காஷ்மீர் 100 கி.மீ, தெலங்கானா 150 கி.மீ, ஆந்திரா 360 கி.மீ, மத்தியப் பிரதேசம் 150 கி.மீ, அஸ்ஸாம் 50 கி.மீ தூர பாதைக்கு மரக்கன்றுகள் நட ஒப்புக்கொண்டுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x