Published : 22 Jun 2016 09:31 AM
Last Updated : 22 Jun 2016 09:31 AM
டெல்லியில் ஷீலா தீட்சித் ஆட்சி காலத்தில் குடிநீர் தொட்டிகளுக் கான ஒப்பந்தம் கோரப்பட்டதில் ரூ.400 கோடி ஊழல் நடந்திருப்ப தாக எழுந்த புகார் தொடர்பாக அம்மாநில அரசின் லஞ்ச ஒழிப்பு துறை வழக்குபதிவு செய்துள்ளது.
இந்த ஊழல் தொடர்பாக கேஜ்ரிவால் மற்றும் ஷீலா தீட்சித் திடம் விசாரணை நடத்தப்படும் என லஞ்ச ஒழிப்பு துறை தலைவர் முகேஷ் மீனா தெரிவித்துள்ளார். அதிகார துஷ்பிரயோகம், கிரிமினில் சதி என மேலும் இருபிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப் பதாக அவர் கூறினார்.
டெல்லியில் ஷீலா தீட்சித் முதல்வராக இருந்த சமயத்தில் 385 ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் குடிநீர் தொட்டிகளை வாடகைக்கு எடுப்பதற்கான ஒப்பந்தம் கோரப் பட்டது. இதில் ஊழல் நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக கடந்த ஆண்டு ஜூன் 19-ல் கேஜ்ரிவால் அரசு உண்மை கண்டறியும் குழுவை அமைத்தது.
இக்குழு விசாரணை நடத்தி ரூ.400 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக ஆகஸ்டில் அறிக்கை தாக்கல் செய்தது. இந்த அறிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி டெல்லி அரசின் லஞ்ச ஒழிப்பு துறைக்கு கடந்த 16-ம் தேதி மாநில துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் பரிந்தரைத்தார்.
இந்த சூழலில் ஆட்சிக்கு வந்து பல மாதங்கள் கடந்த நிலையில் ஒப்பந்தத்தை ரத்து செய்யாத தற்போதைய முதல்வர் கேஜ்ரிவால் மற்றும் அமைச்சர் மிஸ்ராவுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக எம்எல்வுமான விஜேந்தர் குப்தா ஆளுநரிடம் புகார் கடிதம் அளித்தார்.
அதன் அடிப்படையில் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மீதும், ஒப்பந்தத்தை ரத்து செய்யாமல் தொடர்ந்த தற்போதைய முதல்வர் கேஜ்ரிவால் மீதும் லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
இதற்கிடையில் இந்த ஊழலை ஆம் ஆத்மி அரசுதான் முதலில் வெளிக்கொண்டு வந்தது என தெரிவித்துள்ள அமைச்சர் மிஸ்ரா, குடிநீர் விநியோகம் தடைபடும் என்ற காரணத்தினால் தான் ஒப்பந்தத்தை ரத்து செய்யவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT