Last Updated : 16 Jun, 2016 09:04 AM

 

Published : 16 Jun 2016 09:04 AM
Last Updated : 16 Jun 2016 09:04 AM

விசாரணைக் குழு அறிக்கை தாக்கல்

இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் வழக்கில் தொடர்புடைய ஆவணங்கள் காணாமல் போனது தொடர்பாக விசாரிக்க அமைக்கப் பட்ட பி.கே. பிரசாத் ஒரு நபர் குழு, தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

உள்துறை செயலாளர் ராஜிவ் மெக ரிஷிக்கு அக்குழு அளித்துள்ள அறிக்கை யில், “ உள்துறை அமைச்ச கத்தில் இருந்து காணாமல் போன 5 ஆவணங்களில் ஒரு ஆவணம் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் அந்த ஆவணங்கள் தெரிந்தே நீக்கப்பட்டிருக்கின்றன அல்லது தெரியாமல் நீக்கப்பட்டிருக்கின்றன அல்லது தவறுதலாக எங்கோ காணாமல் போய்விட்டன என்ற முடிவுக்கு வரப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அறிக்கையில் அப்போதைய உள்துறை அமைச்சர் சிதம்பரம் அல்லது வேறு யாரைப் பற்றியும் குறிப்பிடப்பட வில்லை. அப்போதைய உள்துறை செயலாளர் ஜி.கே. பிள்ளை உட்பட ஓய்வு பெற்ற 11 அதிகாரிகளிடம் பெறப்பட்ட வாக்கு மூலங்களின் அடிப்படையில் 52 பக்கங்களில் இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. 2009-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதியிலிருந்து 28-ம் தேதிக்குள் இந்த ஆவணங்கள் காணாமல் போயிருக்கின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது பிரமாணப் பத்திரத்தில் இஷ்ரத் ஜஹான் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x