Last Updated : 05 Jan, 2016 09:22 AM

 

Published : 05 Jan 2016 09:22 AM
Last Updated : 05 Jan 2016 09:22 AM

கேட்பாரற்று கிடந்த செல்போனால் தரையிறக்கப்பட்ட துருக்கி விமானம்

மும்பை விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை துருக்கி புறப்பட்ட விமானம், கேட்பாரற்று கிடந்த செல்போன் காரணமாக உடனே தரையிறங்கியது.

துர்கிஷ் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777 ரக விமானம் நேற்று காலை 6.50 மணிக்கு மும்பை விமான நிலையத்தில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு புறப்பட்டது. விமானத்தில் 332 பயணிகள் மற்றும் ஊழியர்கள் இருந்தனர்.

இந்நிலையில் இருக்கை ஒன்றில் யாரும் உரிமை கோராத செல்போன் ஒன்று இருப்பதாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து அந்த விமானம் உடனே திரும்ப அழைக்கப்பட்டது.

விமானம் தரையிறங்கியதும், அனைத்து பயணிகளும் கீழே இறக்கப்பட்டு விமானத்தில் முழு அளவில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அந்த விமானம் நேற்று முற்பகல் 11.30 மணிக்கு இஸ்தான்புல் புறப்பட்டுச் சென்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x