Published : 27 Apr 2017 09:24 AM
Last Updated : 27 Apr 2017 09:24 AM
இந்திய எல்லைப் பகுதியில் இருந்து வங்கதேசத்துக்கு கால்நடைகளைக் கடத்திச் செல்ல 80 சுரங்கம் தோண்டியிருப்பதை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிஹார் மாநிலம் சோப்ரா பதேபூர் எல்லையில் தேயிலை தோட்டங்கள் உள்ளன. இந்திய வங்கதேச எல்லைப் பகுதியான அங்கு ஊடுருவல், கடத்தல் போன்றவற்றைத் தடுக்கவும் பாதுகாப்புக்காவும் இரு நாட்டு எல்லையில் வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேயிலை தோட்டத்தில் இருந்து வங்கதேச எல்லைக்குள் செல்லும் வகையில் 80 மீட்டர் தூரத்துக்கு சுரங்கம் தோண்டியிருப்பதை எல்லைப் பாதுகாப்புப் படையினர் நேற்று கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து எல்லைப் பாது காப்புப் படை டிஐஜி தேவிசரண் சிங் நேற்றுசெய்தியாளர்களிடம் கூறியதாவது:
சோப்ரா பதேபூர் எல்லையில் உள்ள தேயிலை தோட்ட பகுதியில் இருந்து வங்கதேச எல்லை வரை 80 மீட்டர் தூரத்துக்கு சுரங்கம் அமைத்திருப்பதை ரோந்துப் பணியின் போது வீரர்கள் கண்டுபிடித்தனர். இந்த சுரங்கம் இரவு நேரங்களில் தோண்டப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
பிஹார் மாநிலத்தில் இருந்து ஆடு, மாடு போன்ற கால்நடைகளைக் கடத்திச் செல்வதற்காக இந்த சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது. இதை யடுத்து எல்லைப்பகுதியில் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.
இவ்வாறு டிஐஜி தேவிசரண் சிங் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT