Published : 08 Jul 2016 10:42 AM
Last Updated : 08 Jul 2016 10:42 AM
மும்பையில் 2012-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி ஷீனா போரா என்ற இளம்பெண் கொல்லப்பட்டார். ஆனால் இந்த சம்பவம் கடந்த ஆண்டு வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த மும்பை போலீஸார், ஷீனாவின் தாய் இந்திராணி முகர்ஜி, இவரது 2-வது கணவர் சஞ்சீவ் கண்ணா, மூன்றாவது கணவர் பீட்டர் முகர்ஜி, முன்னாள் கார் ஓட்டுநர் ஷ்யாம்வர் ராய் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி முன்னாள் தலைமை செயல் அதிகாரியான பீட்டர் முகர்ஜி, செஷன்ஸ் நீதி மன்றத்தில் 2 முறை ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இவரது மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
“இது தொடர்பாக தாக்கல் செய் யப்பட்டுள்ள குற்றப் பத்திரிகையில் என் மீது எவ்வித குற்றச்சாட்டும் கூறப்படவில்லை. எனவே, எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதி ரேவதி மோஹித் தேரே முன்பு நேற்று விசா ரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரினார். இதை யடுத்து, அடுத்த விசாரணையை வரும் 19-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT