திருப்பதியில் ஒரே நாளில் ரூ.4.24 கோடி வசூல்

திருப்பதியில் ஒரே நாளில் ரூ.4.24 கோடி வசூல்
Updated on
1 min read

திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் கோயில் உண்டியலில் பணம், தங்கம், வெள்ளி மற்றும் வீட்டு மனை, நிலப்பத்திரங்களை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். இதன் காரணமாக உண்டியல் மூலம் மட்டுமே ஆண்டுக்கு ரூ.1,300 கோடியும், ஒரு டன் தங்கமும், 1,500 கிலோ வெள்ளியும் காணிக்கையாக கிடைத்து வருகிறது.

நடப்பாண்டு கடந்த ஜூலை 18-ம் தேதி ரூ.4.69 கோடி உண்டியல் மூலம் ஒரே நாளில் அதிகபட்ச வருவாய் கிடைத்தது. இதேபோன்று ஜூன் 27-ம் தேதி ரூ.4.22 கோடியும், ஜூலை ரூ.4.03 கோடியும் வருவாயாக கிடைத்தது.

நேற்று முன்தினம் 1-ம் தேதி ரூ.4.24 கோடி உண்டியல் மூலம் வருவாய் கிடைத்துள்ளது. தற் போது நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.3 முதல் 3.5 கோடி வரை உண்டியல் காணிக்கை கிடைக் கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in