Published : 24 Jun 2016 08:30 AM
Last Updated : 24 Jun 2016 08:30 AM
ஓசூர் இளைஞரின் வயிற்றில் இருந்த கர்ப்பப்பையை ஆந்திர மருத்துவர்கள் நேற்று அகற்றினர்.
ஓசூரை சேர்ந்தவர் அமரேஷ் (20). இவர் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும், இதனால் பலனில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் அண்மையில் அமரேஷுக்கு வயிற்று வலி அதிகமானது. இதைத்தொடர்ந்து அமரேஷை ஆந்திர மாநிலம், குப்பம் பகுதியில் உள்ள ப்ரியா நர்ஸிங் ஹோம் என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அமரேஷின் வயிற்றில் கர்ப்பப்பை இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அமரேஷுக்கு நேற்று அறுவை சிகிச்சை செய்து கர்ப்பப்பையை அகற்றினர். “இதுபோல் ஆண்களுக்கு கர்ப்பப்பை இருப்பது மிகவும் அரிதானது. இப்போது அறுவை சிகிச்சைக்கு பின் அமரேஷ் நலமுடன் இருக்கின்றார்” என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT