Published : 13 Oct 2014 11:18 AM
Last Updated : 13 Oct 2014 11:18 AM

புதுவையில் மார்ச் 25-ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் தேசிய மாநாடு: தேசியச் செயலாளர் டி.ராஜா தகவல்

புதுச்சேரியில் முதல் முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது அகில இந்திய மாநாடு வரும் 2015 மார்ச் மாதம் நடைபெறும் என்று அக்கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா தெரிவித்தார்.

புதுவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாநாடு தொடர்பான வரவேற்புக் குழுக்கூட்டம் நேற்று நடை பெற்றது. இக்கூட்டத்துக்கு பிறகு டி.ராஜா கூறியதாவது: புதுச்சேரியில் முதல் முறையாக அகில இந்திய மாநாடு வரும் 2015 மார்ச் 25-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஜெயராம் திருமண மண்டபத்தில் நடைபெறும் இந்த மாநாட்டுக்கு நாடு முழுவதும் இருந்து ஆயிரம் பிரதிநிதிகள் வரவுள்ளனர்.

மாநாட்டை சிறப்பாக நடத்த 151 பேர் கொண்ட வரவேற்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் காப்பாளர்களாக மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஆர்.நல்லக்கண்ணு, டாக்டர் கே.நாராயணா, தமிழ் மாநிலச் செயலர் தா.பாண்டியன், கேரள மாநிலச் செயலர் பன்னியன் ரவீந்திரன் ஆகியோர் இருப்பார் கள். வரவேற்புக் குழுத் தலைவ ராக புதுவை மாநில செயலர் ஆர்.விசுவநாதன், பொதுச் செயல ராக நாரா.கலைநாதன், பொருளா ளராக அ.மு.சலீமும், துணைத் தலைவர்களாக அ.ராமமூர்த்தி, வி.எஸ்.அபிஷேகம், து.கீதநாதன், ஆர்.எஸ்.ஜீவானந்தம், பி.தங்கராசு, செயலாளர்களாக சிவா, கே.முருகன், இ.தினேஷ் பொன்னையா, பூ.சரளா ஆகியோர் செயல்படுவார்கள்.

சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்ய குழு அமைத்துள்ளோம். மாநாட்டை முன்னிட்டு புதுவை காந்தி திடலில் நாள்தோறும் மாலை கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். 29-ம் தேதி நிறைவு நாளன்று 1 லட்சம் பேர் பங்கேற்கும் பேரணி நடைபெறும். புதுவையில் முதல் முறையாக தற்போது தான் மாநாடு நடைபெற உள்ளது.

வரும் நவம்பரில் இடதுசாரி கட்சிகள் சந்தித்து பேச உள்ளோம். தற்போதுள்ள சூழலில் அரசியல் அரங்கில் வீரியத்தோடு செயல்படு வது அவசியம். ஒன்றுபட்ட இடதுசாரிகளால் வரலாற்று சவால்களை எதிர்கொள்ள முடியும். அரசியல் சவால்களையும் சந்திக்க தயாராக இருக்கிறோம் என்று டி.ராஜா தெரிவித்தார்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தீர்ப்பு ஆகும். அதை சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டும். ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் இதுபோன்ற வழக்கில் பலர் தண்டனை பெற்றுள்ளனர். உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி ஊழலானது மனித உரிமை மீறலுக்கு ஒப்பானது. சட்டம் ஒழுங்கை காக்கும் பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது என்று டி.ராஜா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x