Published : 25 Oct 2014 09:54 AM
Last Updated : 25 Oct 2014 09:54 AM

பெங்களூர் புவனேஸ்வர் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

விழாக்கால கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக பெங்களூர் - புவனேஸ்வர் இடையே இயக்கப்பட்டு வந்த பிரீமியம் சிறப்பு ரயில் சேவை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அக்டோபர் 25 மற்றும் 27-ம் தேதி இரவு 10.50 மணிக்கு புவனேஸ்வரில் இருந்து புறப்படும் ரயில், ஜோலார்பேட்டை வழியாக மறுநாள் இரவு 10.40 மணிக்கு பெங்களூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தை வந்தடையும்.

பெங்களூர் கன்டோன் மென்டில் இருந்து அக்டோபர் 27 மற்றும் 29-ம் தேதி அதிகாலை 1 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் அதிகாலை 1.45 மணிக்கு புவனேஸ்வரை சென்றடையும். இந்த ரயில் பெர்ஹாம்பூர், விசாகப்பட்டினம், விஜயவாடா, ரேணிகுண்டா, ஜோலார்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இத்தகவலை தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x