Last Updated : 03 Jun, 2017 11:16 AM

 

Published : 03 Jun 2017 11:16 AM
Last Updated : 03 Jun 2017 11:16 AM

பயங்கரவாதத்தை பரப்ப பாகிஸ்தான் நிதியுதவி?- காஷ்மீர், டெல்லியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை

சதி செயல்களில் ஈடுபட பாகிஸ்தானிடம் நிதி பெற்றதாக காஷ்மீரில் 14 இடங்களிலும், டெல்லியில் 8 இடங்களிலும் தேசிய புலானாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.,) ஆய்வு செய்து வருகிறது.

குறிப்பாக காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்கள் வசிக்கும் பகுதிகளில் இந்த ஆய்வுகளை தேசிய புலனாய்வு மையம் முடுக்கிவிட்டுள்ளது.

இதுகுறித்து தேசிய புலனாய்வு மைய அதிகாரிகள் தரப்பில், "இந்தியாவுக்கு எதிராக சதி செயல்களில் ஈடுபட பாகிஸ்தானிடம் நிதி பெற்றுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், காஷ்மீரில் 14 இடங்களிலும், டெல்லியில் 8 இடங்களிலும் தேசிய புலானாய்வு அமைப்பு ஆய்வு செய்து வருகிறது .

தலைநகர் டெல்லியில் 8 ஹவாலா வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. காஷ்மீர் பிரிவினைவாத தலைவரான சையத் அலி ஷா கிலானியின் நெருக்கமானவர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. ஹரியாணா மாநிலம் சோனாபேட்டில் இரண்டு இடங்களில் எங்களது குழுக்கள் ஆய்வில் ஈடுபட்டுள்ளன. வெள்ளிக்கிழமை மாலை முதலே இந்த அய்வுப் பணிகள் நடத்தப்பட்டு வருகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த மாதம் காஷ்மீர் பிரிவினைவாத தலைவரான நயீம் கான் தொலைக்காட்சி ஒன்றில் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பிடமிருந்து பணம் பெற்றதாக ஒப்புக் கொண்டார்.

காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதிகள் இந்தியாவுக்கு எதிராக நாச வேலைகளில் ஈடுபடுவதற்காக பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பாவிடமிருந்து பணம் பெற்று வருகின்றனர் என்று நீண்ட காலமாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x