Last Updated : 13 Oct, 2014 10:48 AM

 

Published : 13 Oct 2014 10:48 AM
Last Updated : 13 Oct 2014 10:48 AM

நார்வே, பின்லாந்து நாடுகளுக்கு பிரணாப் முகர்ஜி சுற்றுப்பயணம்

ஸ்கான்டிநேவிய நாடுகளுடன் இந்தியாவின் உறவை பலப்படுத்திக் கொள்ளும் விதமாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று நார்வே மற்றும் பின்லாந்து நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் புறப்பட்டார்.

மத்திய கனரகத் தொழில்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உடன் செல்கிறார். பிரணாப் அங்கு ஆர்க்டிக் வளையத்தைச் சுற்றிப் பார்க்க இருக்கிறார். இது இந்தப் பயணத்தின் சிறப்பு அம்சமாகக் கருதப்படுகிறது. இங்கு செல்லும் முதல் இந்திய குடியரசுத் தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது 5 நாள் பயணத்தின்போது பிரணாப் முதலில் நார்வே நாட்டுக்குச் செல்கிறார். அங்கு அந்நாட்டு அதிபர், அரசு அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்களைச் சந்திக்க இருக்கிறார். அங்கு கல்வி, ஆய்வு, வணிகம் உட்பட பல துறை சார்ந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கின்றன.

14ம் தேதி பின்லாந்து நாட்டுக்குச் செல்கிறார். அங்கு ஹெல்சின்கி நகர மேயர் அவருக்கு மதிய விருந்து அளிக்கிறார். பின்னர், அங்குள்ள ஆர்க்டிக் வளையத்துக்குச் செல்ல இருக்கிறார். அங்கு பழமையான நகரமான ரோவனியெமிக்குச் சென்று, அருங்காட்சியகம், சான்டா கிளாஸ் கிராமத்தை சுற்றிப் பார்க்க உள்ளார். அவர் 17ம் தேதி நாடு திரும்புகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x