Last Updated : 01 Mar, 2017 10:12 AM

 

Published : 01 Mar 2017 10:12 AM
Last Updated : 01 Mar 2017 10:12 AM

ஜிஎஸ்டி வரி விதிப்பு ஜூலை 1-ல் அமலுக்கு வரும் - மத்திய அரசு தகவல்

நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு முறை வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு நேற்று தெரிவித்தது.

இதுகுறித்து மத்திய பொரு ளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

வரும் 4, 5 தேதிகளில் நடை பெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஐஜிஎஸ்டி, சிஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி வரைவு மசோதாக் களுக்கு ஒப்புதல் பெறப்படும். இதுபோல இழப்பீட்டு வரைவு மசோதாவுக்கு இந்த கவுன்சில் கடந்த பிப்ரவரி 18-ம் தேதி ஒப்புதல் வழங்கியது.

இதையடுத்து, வரும் 9-ம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வில், இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்படும். இதில் எஸ்ஜிஎஸ்டி மசோதா மட்டும் மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்ற வேண்டி இருக்கும்.

அடுத்தபடியாக, அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளும் எந்தெந்த வரி விகித அடுக்கின் கீழ் வரும் என்பது முடிவு செய்யப்படும். அதாவது, 5, 12, 18, 28 என நான்கு அடுக்காக வரி விதிக்க ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, வரும் ஜூலை 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பு நாடு முழுவதும் அமலுக்கு வரும். இதற்கு அனைத்து மாநில அரசு களும் ஒப்புக்கொண்டுள்ளன.

ஜிஎஸ்டி மசோதா கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x