Published : 12 Aug 2016 10:06 AM
Last Updated : 12 Aug 2016 10:06 AM
சிறுமியை கற்பழித்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட சாமியார் அசராம் பாபுவின் இடைக்கால ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உடல்நிலையை காரணம் காட்டி, ஜாமீன் கோரியதால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை யைச் சேர்ந்த 3 பேர் கொண்ட மருத்துவக் குழு, அசராமின் உடல் நிலையை ஆய்வு செய்து 10 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
78 வயதான அசாராம் பாபு, கடுமையான உடல்நல பாதிப்பால் சிறையில் அவதிப்படுவதாகவும், கேரளா சென்று பஞ்ச கர்ம ஆயுர் வேத சிகிச்சை எடுத்துக்கொள்ள இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்றும், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அசாராமின் கோரிக்கையை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து, உச்ச நீதிமன்றத்தில் முறையிடப் பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதி கள் மதன் பி லோக்குர் மற்றும் ஆர்.கே.அகர்வால் ஆகியோர் கொண்ட அமர்வு, இம்மனுவை விசாரித்து, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT