Published : 03 Dec 2013 02:23 PM
Last Updated : 03 Dec 2013 02:23 PM

அமில விற்பனையை ஒழுங்குபடுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

அமில விற்பனையை ஒழுங்குபடுத்துமாறு மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கொடிய தன்மையுடைய அமிலங்களை விற்பனை செய்வதற்கு தகுந்த சட்ட நெறிமுறைகளை வரும் 2014- மார்ச் 31-ஆம் தேதிக்குள் நிர்ணயிக்குமாறு அந்த உத்தரவில் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், அமில வீச்சுக்கு ஆளாகும் நபருக்கு அந்தந்த மாநில அரசுகளே பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை உள்பட முழுமையான சிகிச்சையை முற்றிலும் இலவசமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மீது தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x