Published : 22 Jun 2017 06:59 PM
Last Updated : 22 Jun 2017 06:59 PM
சமீப காலங்களில் மிகப்பெரிய விவசாயப் போராட்டத்தைக் கண்ட மத்தியப் பிரதேசம், விவசாயிகள் தற்கொலைகளுக்குக் காரணம் குடும்பப் பிரச்சினைகள், மதுப்பழக்கம், உடல் நலக்கோளாறு ஆகியவையே என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் ஆணையம் கேட்டிருந்த விளக்கத்துக்கு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், “போலீஸ் நிலையங்கள் எண்ணிக்கை குறித்த ஆவணப்பதிவுகளை வைத்திருக்கவில்லை, ஆனால் விசாரணையில் தொழில்ரீதியான நஷ்டம், கடன் ஆகியவற்றால் விவசாயிகள் தற்கொலை பெரும்பாலும் நிகழ்வதில்லை, குடும்ப பிரச்சினைகள், மதுப்பழக்கம், திருமண விவகாரங்கள், சொத்துத் தகராறுகளே விவசாயிகள் தற்கொலைகளுக்குப் பிரதான காரணமாக இருந்து வந்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
இதே அறிக்கையில் 2011-ம் ஆண்டில் 1326-ஆக இருந்த விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை 2015-ல் 581ஆகக் குறைந்துள்ளது என்ற புள்ளிவிவரமும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை குறித்து மத்தியப் பிரதேச விவசாயிகள் சங்கங்கள் கடும் விமர்சனம் வைத்தன. பாரதிய கிசான் யூனியன் செய்தித் தொடர்பாளர் தர்மேந்திர நாயக் கூறும்போது, “இது மிகவும் பழைய தந்திரமாகும், அனைத்தும் நன்றாகவே இருக்கின்றன என்று காட்டுவதற்காக தயாரிக்கப்பட்ட அறிக்கை. விவசாயிகளின் உண்மையான பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசைத்திருப்ப மேற்கொள்ளப்படும் தந்திர முயற்சி. தற்கொலைகளுக்கு கடன்கள் காரணம் என்று காவல்நிலையங்கள் பதிவு செய்வதில்லை என்பதே உண்மை. நாட்டின் விவசாயக் கொள்கை விவசாயிகளை கடும் நெருக்கடிக்குள்ளாக்கி வேறு வழியில்லாத தற்கொலை எனும் முட்டுச் சந்துக்கு இட்டுச் செல்கிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT