Published : 10 Aug 2016 02:18 PM
Last Updated : 10 Aug 2016 02:18 PM
ஆகஸ்ட் 11, மகள்கள் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தினத்தை மக்கள் கொண்டாடுவதை ஊக்குவிக்கும் வகையில் சமூக ஊடக பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார் மேனகா காந்தி.
ட்விட்டரில் தனது மகள், பேத்தியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதன் கீழ் அனைவரும் இதுபோன்ற புகைப்படங்களை பகிரவும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய அரசின் 'பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ' என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக 'மகள்கள் தினம்' அனுசரிக்கப்படுகிறது.
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "மகள்கள் தினம் கொண்டாட்டத்தின் மூலம் தங்கள் வாழ்வில் உள்ள பெண் பிள்ளைகளை மரியாதை செய்யும் வாய்ப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது. மகள்கள் தினத்தையொட்டி புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் பெண் பிள்ளைகளின் பெருமையைப் பரப்ப வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
#BBBPDaughtersWeek கீழ் அவர் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
கடந்த ஆண்டு மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, அப்பாக்கள் தங்கள் மகள்களுடன் செல்பி எடுத்துப் பகிரச் சொன்னார். அவற்றில் சிலவற்றை பிரதமரும் ரீ ட்வீட் செய்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT