Published : 28 Oct 2014 12:32 PM
Last Updated : 28 Oct 2014 12:32 PM
வெளிநாட்டில் உள்ளவர்கள் பண பரிவர்த்தனையை எளிதாக மேற்கொள்ள வசதிகளை ஏற்படுத்தித் தரும் தொழில்நுட்ப நிறுவனமான ஜூம் கார்ப்பரேஷன் நிறுவனம் இப்போது ஐசிஐசிஐ வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை பரிவர்த்தனை செய்யும் வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளது. இதற்காக இந்நிறுவனம் பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் கூட்டு சேர்ந்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி யின் ஒத்துழைப்பு மற்றும் இந்நிறுவனத்தின் ஐஎம்பிஎஸ் தொழில்நுட்பம் வாயிலாக வெளிநாட்டில் உள்ளவர்கள் தங்கள் உறவினர்களுக்கு ஐசிஐசிஐ வங்கிக் கணக்குக்கு பணத்தை பத்திரமாக அனுப்ப முடியும். ஆண்டு முழுவதும் இந்த வசதியைப் பயன்படுத்த முடியும்.
இதேபோல பஞ்சாப் நேஷனல் வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் பரோடா, பெடரல் வங்கி, யெஸ் வங்கி ஆகிய வங்கி வாடிக்கையாளர்களுக்கும் பன பரிவர்த்தனை செய்ய முடியும். அமெரிக்க வங்கிக் கணக்கு மூலமாக ஆயிரம் டாலருக்கு மேல் பணம் அனுப்புவோர் இதற்காக எவ்வித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என்ற சலுகையையும் ஜூம் நிறுவனம் அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT