Published : 22 Mar 2017 09:54 AM
Last Updated : 22 Mar 2017 09:54 AM
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்காக உழைத்த அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோருக்கும் அவரது குழுவின ருக்கும் மாநில முதல்வர் அமரிந்தர் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அண்மையில் உ.பி. காங்கிரஸ் தலைவர் லக்னோவில் கட்சி அலு வலகத்துக்கு வெளியே பேசும் போது, ‘‘பஞ்சாப் தேர்தலில் வெற்றிக் காக உழைத்த அரசியல் ஆலோ சகர் கிஷோரை உ.பி.க்கு அனுப்பி வையுங்கள். இதற்காக ரூ.5 லட்சம் கொடுக்கவும் தயாராக இருக் கிறோம்’’ என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கிஷோரின் தேர்தல் பணியை பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் நேற்று மனதார பாராட்டினார். இது குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் அவர், ‘‘ஏற்கெனவே பலமுறை தெரிவித்துவிட்டேன். எனினும் மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன். பிரசாந்த் கிஷோரும், அவரது குழுவினரும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற கடுமை யாக உழைத்தனர்’’ என குறிப்பிட் டுள்ளார்.
பஞ்சாபில் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரத்தை கிஷோர் தான் முழு மையாக வடிவமைத்தார். ‘காபி வித் கேப்டன்’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வாக்காளர்களை வெகு வாக கவர்ந்திழுத்தார். இதன் காரணமாகவே மொத்தமுள்ள 117 இடங்களில் 77 தொகுதிகளைக் கைப்பற்றி காங்கிரஸ் ஆட்சியை பிடித்ததாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT