Published : 21 Oct 2013 12:08 PM
Last Updated : 21 Oct 2013 12:08 PM

டெல்லி மாணவி வழக்கு: குற்றவாளிகள் உயர் நீதிமன்றத்தில் மனு

டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற நான்கு குற்றவாளிகளில் 2 பேர் தீர்ப்பு விவரங்களை தங்களுக்கு இந்தியில் மொழிபெயர்த்து தருமாறு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.

டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் 16ம் தேதி ஓடும் பஸ்சில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பாலத்காரம் செய்யப்பட்ட மருத்துவ மாணவி, சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.

இந்த வழக்கில் ஒரு குற்றவாளிக்கு, சிறார் என்ற அடிப்படையில் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது சிறார் நீதிமன்றம். ராம்சிங் என்ற முக்கிய குற்றவாளி, திகார் சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மற்ற 4 குற்றவாளிகளான முகேஷ் (26), அக்ஷய் தாக்கூர் (28), பவன் குப்தா (19), சர்மா (20) ஆகியோருக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த 13ம் தேதி மரண தண்டனை விதித்தது.

இந்நிலையில், முகேஷ் (26), பவன் குப்தா (19), ஆகிய 2 குற்றவாளிகள் தீர்ப்பு மற்றும் தண்டனை விவரங்களை தங்களுக்கு இந்தியில் மொழிபெயர்த்து தருமாறு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று மனு செய்துள்ளனர். இந்த மனு அக்.28-ல் விசாரணைக்கு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x