Published : 17 Apr 2017 09:42 AM
Last Updated : 17 Apr 2017 09:42 AM
பாஜக செயற்குழு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி முத்தலாக் விவகாரத்தை சுட்டிக் காட்டி பேசினார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நிருபர்களிடம் கூறியதாவது:
சமுதாயத்தில் தீமைகள் கண்டறியப்பட்டால் அவற்றை களைய வேண்டியதும் பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதும் நமது கடமை என்று பிரதமர் வலியுறுத்தினார். குறிப்பாக முஸ்லிம் சகோதரிகளுக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும். அவர்களில் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்று பிரதமர் உறுதிபட கூறினார்.
இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT