Last Updated : 05 May, 2017 10:44 AM

 

Published : 05 May 2017 10:44 AM
Last Updated : 05 May 2017 10:44 AM

உத்தரப் பிரதேசத்தில் சாலை விபத்து: 14 பேர் பலி; காயம் 28

உத்தரப் பிரதேசத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஏற்பட்ட சாலை விபத்தில் 10 பேர் பலியாகினர். 28 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து போலீஸார் தரப்பில், "உத்தரப் பிரதேசத்தின் எட்டா மாவட்டத்திலுள்ள சரைன் நீம் கிராமத்தில் மினி பேருந்து ஒன்று இன்று அதிகாலை 4 மணியளவில் கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளான பேருந்தில் 40 பயணிகள் இருந்தனர். அவர்களில் 10 பேர் இந்த விபத்தில் பலியாகினர். 28 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

விபத்து ஏற்பட்ட இடத்தில் மீட்புப் பணிகள் விரைவாக நடந்து வருகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x