Published : 03 Jun 2016 08:21 AM
Last Updated : 03 Jun 2016 08:21 AM
பிஹார் மாநில பள்ளித் தேர்வுகள் வாரிய செயலாளர் ஹரிஹர்நாத் ஜா, பாட்னாவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
‘‘நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில், கலை பாடப்பிரிவுகளில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற முதல் 7 மாணவர்களும், அறிவியல் பாடப்பிரிவில் 7 மாணவர் களும் மறு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.
ஜூன் 3-ம் தேதி (இன்று) இத் தேர்வு நடைபெறும். அதுவரை அவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்படும். கலைப் பிரிவில் முதலிடம் பெற்ற ரூபிராய், அறிவியல் பிரிவில் முதலிடம் பிடித்த சவுரப் குமாரும் தேர்வில் பங்கேற்கிறார்கள்’’ என்றார்.
வைஷாலி மாவட்டத்தில் பகவான்பூரில் உள்ள பிஷுன் ராய் (ஜூனியர் காலேஜ்) கல்லூரி யில் படித்த மாணவர்களே இது போன்ற சர்ச்சையில் அதிக அளவில் சிக்கியுள்ளனர். எனவே, மறுதேர் வுக்கு மாணவர்களை அனுப்பு மாறு, கல்லூரி நிர்வாகத்தை அறிவுறுத்தியிருப்பதாக, மாவட்ட கல்வி அலுவலர் சத்யநாராயண பிரசாத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT