Published : 31 Oct 2014 02:27 PM
Last Updated : 31 Oct 2014 02:27 PM

ஜார்கண்டில் காங்கிரஸ் கூட்டணி முறிந்தது

ஜார்கண்ட் மாநிலத்தில், ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்சா கட்சியுடனான கூட்டணியை காங்கிரஸ் முறித்துக் கொண்டது.

நவம்பர் 25-ல் ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், அம்மாநிலத்தில் ஆளும் கட்சியுடனான கூட்டணியை காங்கிரஸ் முறித்துக் கொண்டது.

இத்தகவலை அனைத்திந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி செயலர் பி.கே.ஹரிபிரசாத், பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், வரவிருக்கும் தேர்தலில் ராஷ்டிரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் போட்டியிட இருப்பதாக கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x