Published : 18 Oct 2014 12:52 PM
Last Updated : 18 Oct 2014 12:52 PM

ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கொலை: 3 பேர் கைது

காஞ்சிபுரம் அடுத்த வெள்ளைகேட் பகுதியில் வசிப்பவர் அண்ணா மலை(29). ரியல்எஸ்டேட் தொழில் செய்துவந்தார். நேற்று முன்தினம், வீட்டின் அருகே உள்ள சாலையில் நடந்துசெல்லும்போது, மர்மநபர்கள் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் அதே இடத்திலேயே இறந்தார்.

தகவல் அறிந்த, காஞ்சி தாலுகா போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உடலை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ரியல் எஸ்டேட் தொழில் போட்டி காரணமாக அண்ணாமலை கொலை செய்யப்பட்டாரா என, போலீஸார் விசாரித்து வருகின் றனர்.

இந்நிலையில், இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக வாலாஜாபாத், திம்மசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த குட்டி, பொன்னையன் மற்றும் விக்னேஸ் ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x