Last Updated : 17 Aug, 2016 02:56 PM

 

Published : 17 Aug 2016 02:56 PM
Last Updated : 17 Aug 2016 02:56 PM

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் படையினர் மூவர் பலி

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் மூவர் பலியாகினர்.

பராமுல்லா மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) நடந்த ராணுவ அணிவகுப்பின்போது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், இரண்டு ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு காவலர் கொல்லப்பட்டனர். நான்கு பேர் காயமடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து கூறிய காவல்துறை மூத்த அதிகாரி, ''பராமுல்லா நகரின் கவாஜா பாக் பகுதியில் ராணுவத்தினரின் அணிவகுப்பு நடந்துகொண்டிருந்தது. அப்போது காலை சுமார் 3.30 மணியளவில் தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்தத் தாக்குதலில், இரண்டு ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு காவலர் கொல்லப்பட்டனர். நான்கு பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். தாக்குதல் நடந்த பகுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகளைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டைகள் தொடங்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x