Published : 09 Oct 2014 09:18 AM
Last Updated : 09 Oct 2014 09:18 AM

பரப்பன அக்ரஹாரா சிறை வெறிச்சோடியது: அதிமுக நிர்வாகிகள் வருகை குறைந்தது

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அடைக்கப்பட்டிருக் கும் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை வளாகத்துக்கு அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் யாரும் வராததால் நேற்று அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் கடந்த மாதம் 27-ம் தேதி பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டன‌ர்.அன்றிலிருந்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நால்வரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நாள் வரை பரப்பன அக்ரஹாரா சிறை வளாகமே பரபரப்பாக காணப்பட்டது.

தினமும் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை அதிமுக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேயர்கள், உள்ளாட்சி உறுப்பினர்கள், தொண்டர்கள் சிறை அமைந்துள்ள பகுதியில் குழுமியிருந்தனர். பலர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடந்த செவ்வாய்க்கிழமை ஜெயலலிதாவின் ஜாமீன் மனு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுக தொண்டர்கள் நீதிமன்ற வளாக‌த்திலேயே கண்ணீர்விட்டு அழுதனர். இனிமேல் உச்சநீதிமன்றத்தின் மூலமாகத்தான் ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளது என்பதை அறிந்த அதிமுகவினர் அன்றிரவே தங்களது ஊர்களுக்கு திரும்பினர்.

நடமாட்டம் குறைந்தது

இதனால் புதன்கிழமை ஜெய லலிதா அடைக்கப்பட்டிருக்கும் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் அதிமுகவினரின் நட மாட்டம் முழுமையாக‌ குறைந் தது. நூற்றுக்கும் குறைவான தொண் டர்களும், வழக்கறிஞர்களுமே வந்திருந்தனர். தமிழக அமைச்சர் வேலுமணி மட்டுமே வந்திருந்தார். அவரையும் போலீஸார் சிறை வளாகத்தின் உள்ளே அனுமதிக்கவில்லை.

பரப்பன அக்ரஹாரா பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் சிறை வளாகம் வெறிச்சோடி காணப் பட்ட‌து. ஜெயலலிதா யாரையும் சந்திக்க விரும்பாதததால் அதிமுக நிர்வாகிகளும், அமைச்சர்களும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப் பினர்களும் வரவில்லை. அதனால் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்டவை இல்லாமல் பாதுகாப்பு பணி சுலபமாக இருந்ததாக அங்கிருந்த போலீஸார் உற்சாகமாக கூறினர்.

சசிகலா உறவினர்கள்

ஜெயலலிதாவை சந்திக்க யாரும் வராதபோதும் சசிகலா, சுதாகரன், இளவரசியை சந்திக்க அவர்களது உறவினர்கள் பலர் வந்தனர். அவர்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை இளவரசியின் மகன் விவேக் செய்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x