Published : 21 Jun 2016 09:00 AM
Last Updated : 21 Jun 2016 09:00 AM
மகாராஷ்டிர அரசுப் பணியாளர் தேர்வாணைய (எம்பிஎஸ்சி) செயலாளர் ராஜேந்திர மங்ருல்கர் மும்பையில் நேற்று கூறியதாவது:
காலியாக உள்ள 5 சுமை தூக்குபவர் வேலைக்கு விண்ணப்பம் கோரப்பட்டது. இதற்காக மொத்தம் 2,424 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த வேலைக்கான கல்வித் தகுதி 4-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். ஆனால், எம்.பில். (5), முதுகலை பட்டம் (253), முதுகலை பட்டயம் (9), பட்டயம் (109), பட்டம் (984), பிளஸ் 2 (605) படித்தவர்கள் எல்லாம் விண்ணப்பித்துள்ளனர்.
இவ்வாறு ராஜேந்திர மங்ருல்கர் கூறினார்.
‘டி’ பிரிவைச் சேர்ந்த இந்த வேலைக்கு விண்ணப்பங்கள் கோரி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான எழுத்துத் தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT